tamilnadu

img

மூடிய என்டிசி பஞ்சாலைகளைத் திறக்க மத்திய அரசு மறுப்பு....  கே.எஸ்.அழகிரி விமர்சனம்...

சென்னை:
தேசிய மயமாக்கப்பட்ட ஆலைகளின் இன்றைய சொத்து மதிப்பு ரூபாய் 50 ஆயிரம் கோடி. இதனை நிரந்தரமாக மூடுவதன் மூலம் பொதுத்துறை சொத்துகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய பாஜக அரசு எடுத்துவிடுமோ? என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  விடுத் துள்ள அறிக்கை:“தமிழகத்தில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட பஞ்சாலைகளைத் திறக்க தேசிய பஞ்சாலைக் கழகம் மறுத்து வருவதால், அவை அனைத்தும் நிரந்தரமாக மூடப்படும் என்கிற அச்சம்தொழிலாளர்களுக்கு ஏற்பட்டி ருக்கிறது.தமிழகத்தில் ஈரோடு, திருப் பூர், சேலம், கோவை ஆகிய நகரங்களில் சிறு, நடுத்தரப் பஞ் சாலைகள் மிகப்பெரிய அளவில் பங்காற்றி வருகின்றன. பருத்தி நூல் ஏற்றுமதி 39 சதவிகிதம் சரிந்திருக்கிறது. இதனால் ஜவுளித் தொழில் கடுமையான பொருளாதார முடக்கத்திற்கு ஆளாகியிருக்கிறது.

கொரோனாவுக்கு முன்புவரை செயல்பட்டு வந்தஇந்த ஆலைகள் பொது முடக்கத்திற்குப் பிறகு  திறக்கப்பட வில்லை. என்.டி.சி. நிர்வாகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சகத்திடம் தொழிலாளர்களும், தொழிற்சங்கத்தினரும் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பினர். மேலும், தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 7 ஆலை களில் 3 மட்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டன.மற்ற ஆலைகளைத் திறக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. பல ஆயிரம் கோடி சொத்துகள் இருந்தாலும், தனியார் பஞ்சாலைகளுக்கு மறைமுக ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசின் ஆலைகள் திறக்கப்படாமல் இருக்கின்றன என்ற குற்றச் சாட்டு எழுந்திருக்கிறது. நஷ் டத்தில் இயங்குவதாகக் கூறி, ஒவ்வொரு ஆலைகளாக மூடி வருகிற என்.டி.சி. நிர்வாகம், அதே காரணத்தைக் கூறி அனைத்து ஆலைகளையும் மூடிவிடுமோ? என்ற அச்சம் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தேசியமயமாக்கப்பட்ட ஆலைகளின் இன்றைய சொத்து மதிப்பு ரூபாய் 50 ஆயிரம் கோடி. இதனை நிரந்தரமாக மூடுவதன் மூலம் பொதுத்துறை சொத்துகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய பாஜக அரசு எடுத்துவிடுமோ? என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சனை குறித்து தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளைப் பரிவுடன் கவனிக்க மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாராக இல்லை.அதேபோல், தமிழகத்தில் என்.டி.சி. ஆலைகள் மூடப்பட்டிருப்பதால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 10 மாதங்களாக வேலை இழந்து, ஊதியத்தையும் பறிகொடுத்துள்ளனர். இந்தியாவில், உற்பத்தி சார்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவிகிதப் பங்களிப்பையும், ஒட்டுமொத்த உள்நாட்டு மொத்த உற் பத்தியில் 2.3 சதவிகிதம் பங் களிப்பையும் ஜவுளித் தொழில் அளிப்பது குறித்து, மத்திய ஜவுளி அமைச்சகமே கவலை தெரிவித்துள்ளது.தொழில்துறை உற்பத்தியில் 7 சதவிகிதமும் மற்றும் ஏற்றுமதி வருவாயில் 15 சதவிகிதமும் ஜவுளித்துறையின் பங்காக இருக்கிறது. இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 11 சதவிகிதமாகும். விவசாயத் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் அதாவது, 4 கோடியே 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 2ஆவது பெரிய துறையாக ஜவுளித்துறை திகழ்கிறது.ஆனால், மத்திய பாஜக அரசின் தவறான ஜவுளிக் கொள்கை காரணமாக, அதிக அளவிலான வேலைவாய்ப்பையும், ஏற்றுமதியையும், அந்நியச் செலாவணியையும் வழங்குகிற ஜவுளித் துறை நலிவடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டு, காப்பாற்ற முடியாத சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.இவ்வாறு கே.எஸ்.அழகிரி கோரிக்கை வைத்துள்ளார்.

;