திருவண்ணாமலை, ஜூலை 5- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், நீர்தோட்டம் மகளிர் குழு மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆண்கள் குழு ஆகிய குழுக்கள், கடந்த 15 ஆண்டுகளாக துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது இந்த பணியில் 96 தொழிலாளர்கள் வேலை செய் கின்றனர். இந்தப் பணியினை பேரூராட்சி செயல் அலுவலர் நிர்வ கித்து வந்தார். இந்நிலையில் வியா ழனன்று (ஜூலை 4) துப்புரவு பணி செய்து வந்த 96 தொழி லாளர்களின் எண்ணிக்கையை குறைத்து, 46 துப்புரவு தொழி லாளர்களுக்கு மட்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. எந்த முன் அறிவிப்பும் இன்றி 50 துப்புரவுப் பணியாளர்களின் பணி திடீரென பறிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து செங்கம் பேரூராட்சி நிர்வாகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் வெள்ளியன்று (ஜூலை 5) போராட் டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு சார்பில், மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட கோரிக்கை மனு வில், கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிய 96 தொழிலாளர்க ளையும் பேரூராட்சி நிர்வாகமே பணி உத்தரவு வழங்கி வேலை வழங்க வேண்டும், துப்புரவு பணி களை தனியாரிடம் ஒப்படைக்கும் போக்கை கைவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.