tamilnadu

பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள்... பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி...

சென்னை:
தமிழ்நாட்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் களை செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் வெவ் வேறு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப் பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலானமாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.அதன்படி பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைக்க திட்டமிடப் பட்டுள்ளது. ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்கள் என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டு பள்ளிகளைத் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

;