tamilnadu

img

நகர விற்பனைக்குழுவை விரிவுப்படுத்த வேண்டும்

சென்னை மாநகராட்சி 200 வட்டங்களை கொண்டது. மாநகரம் முழுவதும் 36 ஆயிரம் வியாபாரி கள் உள்ளனர். ஆனால் நகர விற்பனைக் குழுவில் வியாபாரிகள் 6 பேரும், அதிகாரி கள் 9 பேரும் இருப்பது பொருத்த மாக இல்லை. எனவே, நகர விற்பனைக் குழுவை தில்லியில் உள்ளது போல் 30 பேர் கொண்டதாக மாற்ற வேண்டும். அதில் 50 விழுக்காடு வியாபாரிகளுக்கு இட மளிக்க வேண்டும் அல்லது முன்பிருந்தது போல் மண்டலத்திற்கு ஒரு விற்பனைக் குழுவை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் சென்னை மாநகர் சிறுகடை வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம்.வி.கிருஷ்ணன்.

இதுகுறித்து எமது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

40 வருடங்களுக்கு முன்பு சமூக விரோ திகள், காவல் துறை, மாநகராட்சி அதி காரிகளின் அடக்குமுறை மிகப்பெரிய அள வில் இருந்தது. இதனால் 375 வருட பாரம்பரியம் கொண்ட சைனா பஜாரில் முதன்முதலில் வியாபாரிகள் சங்கம் உருவானது. போராட்டம், நீதிமன்ற வழக்குகள் என சென்று வியாபாரிகளின் உரிமைகளை நிலைநாட்டினோம். அதனைத் தொடர்ந்து தி.நகர், திரு வல்லிக்கேணி என மாநகரம் முழுவதும்  வியாபாரி சங்கங்கள் உருவாகின. இதனையடுத்து 54 சங்கங்களை ஒருங்கி ணைந்து சென்னை மாநகர் சிறு கடை வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு உருவானது.

தெருவோர வியாபாரிகள் சட்டம்

மாநகரம் முழுவதும் உருவான வியாபாரி சங்கங்கள் போராட்டங்களை நடத்தி, நீதிமன்றங்களை நாடின. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற வழக்கு களால் உச்சநீதிமன்றம் தெருவோர வியா பாரிகள் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களின் அழுத்தத்தை யடுத்து ஒன்றிய அரசு தெருவோர வியா பாரிகள் (வாழ்வாதாரம் மற்றும் தெரு வோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டம்- 2014 கொண்டு வந்தது. ஆனால், இந்த சட்டத்தின்படி முறையீடு செய்வ தற்கான குழுவை மாநகராட்சி அமைக்கா மல் உள்ளது.

5 ஆண்டுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தி, தேர்தல் நடத்தி புதிய நகர விற்பனைக் குழுவை தேர்ந்தெடுக்க வேண்டும். 2018ஆம் ஆண்டு கணக் கெடுப்பின்படி சென்னையில் 27ஆயிரம் வியாபாரிகள் இருந்தனர், 972 இடங்களில் வியாபார பகுதிகள் இருந்தன. அப்போது மண்டலத்திற்கு ஒரு நகர விற்பனைக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. எனவேதான் 2018-2023 காலக்கட்டத்தில் சென்னையில் பெரிய அளவில் கடைகளை அகற்றும் பிரச்சனை எழவில்லை.

ஆனால், உயிர்நீதிமன்றம் மாநக ராட்சிக்கு முழுமைக்கும் ஒரே நகர விற்பனைக் குழுவை அமைக்க உத்தர விட்டது. மேலும், 2023 ஆம் ஆண்டு கண க்கெடுப்பில் 35 ஆயிரத்து 828 வியாபாரி கள் உள்ளனர். ஆனால் வியாபாரம் செய்யும் இடங்கள் 776ஆக குறைக்கப் பட்டுள்ளது. வியாபாரிகள் 30 விழுக்காடு  அதிகரித்துள்ள நிலையில், வியாபாரம் செய்யும் இடங்கள் 1227ஆக அதி கரித்திருக்க வேண்டும். மாறாக, 776ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், நகர மக்கள்தொகையில் 2.5 விழுக்காடு வியாபாரிகள் என கணக்கிட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அதன்படி மாநகரில் 2.50 லட்சம் வியா பாரிகள் என கணக்கிட்டு கட்டமைப்பை உருவாக்கி இருக்கு வேண்டும், இதற்கு மாறாகத்தான் மாநகராட்சியின் செயல்பாடு உள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி  புதிய நகர விற்பனைக்குழு அமைக் கப்பட்டது. தெருவோர வியாபாரிகள் சட்ட ப்படி, 45 நாட்களுக்கு ஒருமுறை நகர விற்பனைக்குழு கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் கடந்த 15 மாதங்களில் 3 முறை மட்டுமே கூட்டம் நடந்துள்ளது. கடந்த 6 மாதமாக கூட்டமே நடைபெறவில்லை. நகர விற்பனைக்குழுவிற்கென்று தனி அலுவலகம் இல்லை. மாநகராட்சி ஆணை யரை சந்தித்து முறையிட முடியவில்லை. வியாபாரிகள் முறையிடுவதற்கான குழு அமைக்கப்படவில்லை. நகர விற்பனைக் குழுவிற்கென்று தனி நிதி இல்லை. அதனை மாநில அரசிடம் கேட்டுபெற மாநகராட்சியும் தயாராக இல்லை.

ஜனவரி மாதம் நடைபெற்ற கூட்டத் தில் விவாத பொருளை கொடுத்துவிட்டு அதன்மீது விவாதம் நடத்தவில்லை. மாறாக, வருகை பதிவேட்டை வைத்து அவற்றை நிறைவேற்றியதாக மாநகராட்சி மோசடியாக உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. ஜனநாயக பூர்வமாக நடத்தி வியாபாரிகளை பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், அராஜ கமாக நடந்து கொள்கிறது.

வியாபாரி சங்கங்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை சுட்டிக்காட்டினால் அதன்மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் மாநகராட்சி, தெருவோரா கடைகளை இரக்கமின்றி அகற்றுகிறது. 20 மண்டலத் திற்கும் ஒரே ஒரு நகரவிற்பனைக்குழு இருப்பதாலும், உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாலும், இத்தகைய அத்துமீறல்கள் மீது உடனடி தலையீடு செய்ய முடியவில்லை. எனவே தான், நகர விற்பனைக்குழு உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் அல்லது தமிழக அரசு மண்டலத்திற்கு ஒரு  நகர விற்பனைக்குழுவை அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

எம்.வி.கிருஷ்ணன்

சாலையோர வியாபாரிகள் நடத்திய சட்டப் போராட்டம்

வியாபாரிகளின் உரிமைக்காக போராட்டம் நடத்தியதற் காக காவல்துறையினர் தாக்கு லுக்கு உள்ளானவரும், வியாபாரி களுக்கென்று சைனா பஜாரில் 1979ஆம் ஆண்டு முதன்முறையாக சென்னை நகர சிறுகடை வியா பாரிகள் சங்கத்தை உருவாக்கிய வருமான அபுதாகீர், வியாபாரிகள் சங்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,  அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளின் தலையீடு காரணமாகவே சென்னை நகரில் இன்றைக்கு வியாபாரிகள் ஓரளவு இடைஞ் சலின்றி வியாபாரம் செய்ய முடிகிறது என்கிறார்.

375 வருட பாரம்பரியம் கொண்டது சைனா பஜார். எம்ஜிஆர் ஆட்சியின் போது 1979ஆம் ஆண்டு சைனா பஜார், ரித்தர்டன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளை அகற்றினர். அப்போது கம்யூனிஸ்ட்டுகளாக இருந்த அபுதாகீர், பால்முக மது, சேவியர், இப்ராகிம் உள்ளிட்டோர் இணைந்து சென்னை  நகர சிறுகடை வியாபாரிகள் சங்கத்தை உருவாக்கினர். அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கல்யாணசுந்தரம் முன்முயற்சியால் முதலமைச்சருடன் பேசி சைனா பஜாரில் இருந்த 794 கடைகள் மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து பெரிய கடை முதலாளிகள் உச்சநீதி மன்றம் சென்றனர். 1994ஆம் ஆண்டு சங்கம் நடத்திய வியா பாரிகள் மாநாட்டில் பேசிய வி.ஆர்.கிருஷ்ணய்யர், சாலையோர வியாபாரம் அடிப்படை உரிமை என்றார். அதனைத் தொடர்ந்து கூட்டமைப்பு நடத்தி வழக்கில் 794 கடை களுக்கும் அரசு கட்டிடம் கட்டி கொடுக்க நீதிமன்றம் உத்தர விட்டது. இவை அனைத்தும் கம்யூனிஸ்ட்டுகளால் சாத்திய மானது. இவற்றின் தாக்கத்தால் சென்னை நகரம் முழுவதும் பல வியாபாரிகள் சங்கங்கள் உருவாகி, கூட்டமைப்பாக உரு மாறியது. தெருவோர வியாபாரம் பாதுகாக்கப்பட்டது. சுய தொழிலாக உள்ள சாலையோர வியாபாரத்தை அரசு ஊக்கு விக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறி னார்.