tamilnadu

img

செங்கொடியின் வீரப் புதல்வர்களான சின்னியம்பாளையம்‌ தீரர்கள்‌ -யூ.கே.சிவஞானம்

1937ஆம் ‌வருடத்தில் ‌லெட்சுமிமில்‌ தொழி லாளர்களின்‌ போரா ட்ட வெற்றிக்குப் பின்‌ கோவை  நகரத் தொழிலாளி மக்களிடையே எழுச்சி கர உணர்வு எங்கும் ‌பெருக்கெடுத்தோட ஆரம்பித்தது.  குறிப்பாக ரங்கவிலாஸ்‌, ராதாகிருஷ்ணா போன்ற மில்க ளில்  ‌இதன்‌ பிரதிபலிப்பு தெளிவாகத்‌ தெரிந்தது. ராமையன்‌, வெங்கடாசலம்‌, ரங்கண்ணன், சின்னையன் போன்ற இளந்தொழிலாளிகள்‌ செங்கொடிச்‌சங்கத்தின் ‌தாக்க‌த்தினால் உந்தப்பட்டு இளைஞர்களை ஒன்று திரட்டி தேசிய வாலிபர்‌சங்கத்தை உருவாக்குவதில் ‌முன்னின்றனர்‌. இந் நால்வரில் ‌வெங்கடாசலம்‌ சிறந்த பாடகராவார்‌. இந்நால்வரும்‌, கலைக்குழு மூலம் மக்களிடையே கருத்துப் ‌பிரச்சாரம் ‌நடத்தும் ‌பொருட்டு ‘சங்கீத கானசபா’ என்றபெய ரில்‌ 15 உறுப்பினர்கள் ‌கொண்ட குழுவை அமைத்தனர். சின்னியம்பாளையம்‌, மதுக்க ரை போன்ற இடங்களில் ‌நாடகங்கள் ‌நடத்தி னர். இந்த மேடைகளில்‌ஜீவாவின் ‌ஆவேச மூட்டும் ‌‌பாடல்களும் ‌பாடப்பட்டன.

ரவுடிக் கும்பலைத் திரட்டியமில் முதலாளிகள்
கோவை நகரில் ‌மில் ‌தொழிலாளர்களின் ‌போராட்ட  உணர்வு பொங்குவதைக் ‌கண்ட பீள மேடு ரங்கவிலாஸ்‌, ராதா கிருஷ்ணாமில்‌ முதலாளிகள்‌, தொழிலாளிகளைப் ‌பிளவு படுத்தும் ‌பொருட்டு போட்டிச்‌சங்கங்களைத் ‌துவக்கினர்‌. மில்களுக்குள் ‌மேஸ்திரிகள் ‌தலை மையில் ‌ரவுடிக்‌கும்பல்கள் ‌திரட்டப்பட்டன.

செங்கொடிச் ‌சங்கத் தலைவர்களும்‌, முக்கிய  ஊழியர்களும் ‌இந்த ரவுடிக்‌ கும்பலினால் ‌தாக்க ப்படலாயினர்‌. ஆங்கிலேய அரசாங்கத்தின்‌ காவல்துறை, இந்த ரவுடிகள் ‌கூட்டத்தின் ‌அராஜகத்திற்குத்‌ துணை நின்றது. ரங்க விலாஸ் ‌மில்லில் ‌காவல்காரனாக இருந்த பொன்னன்‌என்ற ரவுடி அந்தமில் ‌முதலாளி யின் ‌கையாள். ‌அவன் ‌தலைமையிலான ஒரு ரவுடிக்‌கும்பல் ‌தொழிலாளிகளை அடிப்பது, மிரட்டுவது போன்ற செயல்களில் ‌ஈடுபட்டு வந்தது. ராதாகிருஷ்ணா மில்லில் ‌மட்டும்‌ இத்தகைய ரவுடிகள் ‌25  பேர் ‌இருந்தனர்‌. மில்லுக்குள் ‌ஆண்‌ தொழிலாளிகள்‌ மட்டுமல்ல,  பெண் ‌தொழிலாளிகளும் ‌தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டனர்‌. அந்த மில்லின் ‌ரீலிங் ‌பகுதியில்‌ 57 பெண்‌ தொழிலாளிகள்‌ வேலை பார்த்து வந்தனர்‌.

அவர்களும் ‌செங்கொடிச்‌சங்கத்தைச் ‌சேர்ந்த வர்கள்‌. அந்த பெண்‌ தொழிலாளிகளின் ‌தலைவியான ராஜம்மாளிடமும்‌, பொன்னன் ‌வம்புக் கிழுத்து தகராறு  செய்ய முயன்றான்‌. ராஜம்மாளிடம் ‌வம்பு செய்தால் கடும் விளைவு கள் ஏற்படும் என்று செங்கொடிச் ‌சங்கம்‌ எச்ச ரித்தது. மில்லுக்குள் ‌மட்டுமல்ல, மில்லுக்கு வெளியேயும் ‌பொன்‌னனும், அவனது ரவுடிக் ‌கும்பலும் ‌தொழிலாளிகளை மிரட்டுவது, அவர்களின் ‌சைக்கிள்களைப் பிடுங்கி வைத்துக் ‌கொண்டு அடிப்பது, பெண்களை பாலியல் சீண்டல் செய்வது போன்ற அட்டூழியங்களைச் ‌செய்து வந்தனர்‌.

1944 ஆம்‌ ஆண்டின் ‌இறுதியில் ‌ஓர் நாள்‌, ரவுடி பொன்னன்‌, நீலம்‌பூரிலுள்ள ஒரு கள்ளுக் கடையில் குடித்துவிட்டு சின்னியம்பாளையம் வழியாக வந்தான். அங்கிருந்த ராமையன்‌, வெங்கடாச்சலம், ‌ரங்கண்ணன் மற்றும் ‌சின்னா னுடன் ‌வம்புச் ‌சண்டை இழுத்தான்‌. இந்தக் ‌கொடியவனின்‌ செயல்களால் கோபமடைந்தி ருந்த நால்வரும், பொன்னனுக்குப்‌ பதிலடி கொடுத்தனர்.

மரண வாக்குமூலமும் தூக்குத்தண்டனையும்
பலத்த காயத்‌துடன் ‌கிடந்த அவனை காவல்துறையினர்‌மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். அவனிடமிருந்து மரண வாக்கு மூலம் பெற்றனர். இந்த நால்வரும்‌ தான்‌ தன்னைத்‌ தாக்கினர்‌ என்று பொன்னன்  மரணவாக்கு மூலம் கொடுத்த பின்‌ அங்கேயே இறந்து போனான்‌.   காவல்துறை, இந்த நால்வரையும் ‌கைது செய்து அவர்கள் ‌மீது கொலைக் குற்றம் ‌சுமத்தி யது. மில் ‌முதலாளி இந்த நால்வருக்கும் ‌தூக்குத் ‌தண்டனை கிடைக்கச் ‌செய்வதற்காக பணத்தை வாரியிறைத்தார். இரண்டு ஆண்டு காலத்திற்கு ‌பின் ‌இந்த நால்வரையும் ‌தூக்கிலிடும் படிநீதி மன்றம்‌தீர்ப்பளித்தது. இதைக் ‌கேட்டு கோவைத் தொழிலாளி மக்கள் மட்டு மல்ல, தமிழகத் தொழி லாளி வர்க்கமே கொந்தளித்தது.  இந்த நால்வரின் மரண தண்டனையை எதிர்த்து தொழிற்சங்கம் சென்னை உயர்  நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

ஆனால் அங்கேயும் மரண தண்டனை உறுதி செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து லண்டனிலிருந்த பிரிவீ கவுன்சில் எனப்படும்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. புகழ் பெற்ற  வழக்கறிஞர்  டி.என்.பிரிட் இந்த  நால்வரின் சார்பாக வாதாடினார். ஆனால், அங்கேயும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.  அன்றைய கட்சியின் மாநிலச் செயலாள ராக இருந்த தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் பிரிவி கவுன்சிலில் பிரிட் வாதாட கடும் முயற்சி களை மேற்கொண்டார். மேலும் ஜனசக்தி பத்திரிகையில் பிரிவி கவுன்சிலில் சின்னியம் பாளையம் தோழர்களை விடுதலை செய்திட தந்தி அனுப்புமாறு அறைகூவல் விடுத்தார். அன்றைய அகில இந்திய பொதுச் செயலாளர் பி.சி.ஜோசி சின்னியம்பாளையம் தோழர்கள் தூக்கிலிடப் பட்ட பின்பு கோவை வந்து அவர் களது குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

1946ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதியன்று காலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுமென்று  அறிவிக்கப்பட்டது. அந்த நால்வரின் குடும்பத்தினரும் தொழிலா ளித் தோழர்களும் ‌துயரத்தில் ‌கதறினர்‌. குடும்பத்தினர் ‌மட்டுமல்லாமல் தினமும் நூற்றுக்கணக்கானோர்‌ கோவை மத்திய சிறைக்கு வந்து அவர்களைச்‌ சந்தித்துப்‌ பேசி கண்ணீர்‌ வடித்துச் சென்றனர்.

இந்த நால்வரில் ‌ராமையன் ‌திருமண மாகாதவர்‌. இந்த நான்கு வீரர்களும் ‌தூக்கிலிடப் படுவதற்கு முதல் நாள் ‌ஜனவரி ஏழாம் ‌தேதி யன்று கம்யூனிஸ்ட் ‌தலைவர்கள் ‌பி.ராம மூர்த்தி, எம்‌.பூபதி, கே.ரமணி ஆகிய மூவரும்‌ சிறைச்சாலைக்குச் ‌சென்று இந்தநான்கு வீரர்களையும்  ஒன்றாகச்‌ சந்தித்தார்கள்‌. அடுத்த சிலமணி நேரத்தில்‌ இந்த நான்கு அருமை யான தோழர்களை இழக்கப் போகிறோமே என்ற உணர்வு மேலிட்ட தலைவர்கள் தங்களை  அறியாமல் ‌கண்ணீர் ‌வடித்து விம்மி அழுதனர்‌

தலைவர்களுக்கு ஆறுதல் சொன்ன தியாகிகள்
கம்பிக்குள் ‌நின்றவாறே அந்த நான்கு வீரர்களும்  இந்நிகழ்ச்சியை அமைதியாகப் ‌பார்த்தனர்‌. ஓரிரு நிமிடங்களுக்குப் ‌பின்‌ ராமை யன்‌, மூன்று தலைவர்களையும் ‌பார்த்து கணீ ரென்று பேச ஆரம்பித்தார்‌. அவரது உதட்டி லிருந்து எழுந்த ஓசை வெறும் ‌வாக்கியங்களாக இல்லை. வீரச்‌சபதமாகவே ஒலித்தது. “எங்களின் ‌தலைவர்களான நீங்களே கண்ணீர்‌ சிந்தி அழுதால் ‌எங்கள்‌நிலை என்ன வாகும்‌? உங்களை நம்பித்தான் ‌நாங்கள் ‌நாளை காலை தூக்குமேடை ஏறப் ‌போகிறோம்‌ எங்கள் ‌நான்கு பேர்களை அழித்துவிட்டால்‌ செங்கொடியை-கம்யூனிசத் ‌தத்துவத்தை அழித்து விடமுடியாது.

எங்களைப் ‌போன்ற ஆயிரக்கணக்கான தோழர்கள்‌முன்னணிக்கு வருவார்கள்‌. அவர்களை ஊக்குவித்து அரசியலைப் ‌போதித்து வளர்க்கும்‌ பணியை தலைவர்களாகிய நீங்கள் செய்யவேண்டும்‌. நீங்கள்‌கண்ணீர் ‌சிந்தாமல் அவ்வாக்குறுதி யினை எங்களுக்குத் ‌தாருங்கள்‌. “செங்கொடியும்‌, கம்யூனிச லட்சியமும் தான் உலகத்தில்‌வெற்றிபெறப்‌போகிறது. சோவியத்யூனியனில் ‌தொழிலாளி வர்க்க ஆட்சி வெற்றி மேல் ‌வெற்றி கண்டு உலக முதலாளித்துவத்திற்கு கல்லறை கட்டி வரு கிறது. சோவியத்தும்‌, சீனமும் ஓன்று சேர்ந்தால் ‌உலகஏகாதிபத்தியங்கள் வீழ்த்தப்படும்‌.

இந்தியாவிற்கு அப்பால் ‌உள்ள மற்ற ஆசிய நாடு களில்‌ செஞ்சூரியன் உதயமாகிக் கொண்டிருக் கிறது. வெற்றி தொழிலாளி வர்க்கத்திற்கே என்று நாங்கள் மகிழ்ச்சியோடு தூக்கு மேடை ஏறுகிறோம்‌. “எங்களின் ‌மற்றொரு வேண்டுகோள்‌: கோவை சிங்காநல்லூர் ‌தொழிலாளர்‌ மக்களி டையே ஏற்பட்டுள்ள பிளவை முதலாளி வர்க்கம் பயன்படுத்தி சகோதரச் ‌சண்டையை மூட்டி ஒற்றுமை  ஏற்படாமல் ‌சதிசெய்து வருகிறது. ரவுடித்தனத்தைக்  ‌கொண்டு செங்கொடி இயக்‌கத்தை உடைக்கவும்‌, எங்களின் ‌உயிரைப் ‌பறிக்கவும் ‌இப்பிளவு அவர்களுக்குப் ‌பயன்பட் டது.

பிளவைப்‌போக்கி ஒன்றுபட தொழிலாளி வர்க்கம் ‌சபதமேற்று செயல்பட வேண்டுமென்ற எங்கள் ‌செய்தியினை அவர்களுக்குச் ‌சொல்‌ லுங்கள்‌: அந்த ஓற்றுமை உணர்வை வளர்க்க உதவியாக எங்கள் ‌நால்வர் ‌உடல்களையும்‌ ஒன்றாக ஒரே சமாதியில் ‌அடக்கம் ‌செய்யுங்கள்‌! கலங்காதீர்கள்‌! செங்கொடி ஆட்சி பீடம் ‌ஏறும்‌!  கம்யூனிசத் தத்துவம் ‌வெல்லும்‌. நாங்கள்‌ விடைபெறுகிறோம்‌!” ராமையனின் ஆவேச உரை தலைவர்களை கலங்க வைத்தது. “நீங்கள்‌ –கூறியதை உயிருள்ளளவும் ‌மறக்கா மல் ‌உறுதியாக நிறைவேற்றுவோம்‌. பிளவுபட்டு ‌கிடக்கும்‌தொழிலாளி வர்க்கத்தை ஒன்றுபடுத்து வோம்‌ “என்று மூன்று தலைவர்களும் உறுதி கூறி கரமுயர்த்தி அந்த நான்கு வீரர்களுக்கும் ‌வீர வணக்கம் ‌செலுத்தி கண்கலங்கியவாறே விடைபெற்றுத் ‌திரும்பினர்‌.

ஒன்றாக உடல்கள் அடக்கம்
அடுத்த  நாள்  அதிகாலையில் நால்வரும் தூக்கிலிப்பட்டனர். அவர்களது உடல்களைக் கண்டு வீரவணக்கம் செலுத்த பல்லாயிரக் கணக்கான மக்கள் விடியும் முன்னரே சிறை  வாசலில் கூடி விட்டனர்‌. ஸ்டேன்ஸ்‌, சோம சுந்தரா மற்றும் ‌காளீஸ்வரா மில் ‌தொழிலாளி கள்‌ வேலை நிறுத்தம் ‌செய்துசிறைவாசலுக்கு வந்து விட்டனர்‌. பெருங் கூட்டத்தைக் ‌கண்டு அச்சமடைந்த சிறை அதிகாரிகள் ‌சிறையின்‌ மற்றொரு வாயில் ‌வழியே இந்த நான்கு வீரர்களின் ‌உடல்களை மோட்டார்‌ வாகனத்தில் ‌வைத்து சின்னியம்பாளையத்திற்கு காவல் துறை மூலம்‌அனுப்பிவிட்டனர்‌.

நான்கு வீரர்களின்‌ உடல்களும் ‌அவரவர் ‌குடும்பத்தா ரிடம்‌ ஒப்படைக்கப்பட்டது. வெகுநேரமாக சிறைவாயிலில் ‌காத்திருந்த மக்களும்‌, தலைவர்களும்‌ இந்தத் ‌தகவலை ‌கேட்டு ஆவேசமடைந்து சின்னியம்பாளை யத்திற்கு விரைந்தனர்‌. நான்கு வீரர்களின் ‌உடல்களும் ‌அவினாசிசாலையில் ‌அமைக்க  பட்டிருந்த மேடையில் ‌மக்களின் ‌இறுதி அஞ் சலிக்காக வைக்கப்பட்டன. ஆண்களும்‌, பெண் களும் ‌கதறியழுது கண்ணீர் ‌வடித்தவாறே செங்கொடியின் தவப் புதல்வர்களுக்கு இறுதி  அஞ்சலி செய்தனர்‌. அதன் பின்னர் ‌வீரத்‌தியாகி களின் ‌இறுதி யாத்திரை தொடங்கியது. பல்லா யிரக்கணக்கானமக்கள் ‌பின்‌ தொடர்ந்து வந்த னர்‌.

இறுதியாக நால்வரின் ‌உடல்களும் ‌அவர் கள் ‌விரும்பியவாறே ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது. அவர்கள் ‌சமாதி முன்‌செங் கொடி பறக்க விடப்பட்டது. அது இன்றும் ‌காற்றில் ‌அசைந்து தொழிலாளி வர்க்கத்தின்‌ஒப்பற்ற அந்த நான்கு வீரர்களுக்கு தன்‌அஞ்சலியை செலுத்திக் கொண்டிருக்கிறது.  சின்னியம்பாளையம் தியாகிகள் போராடிய ரங்கவிலாஸ் மில் தான் பின்னர் என்.டி.சி ஆலையாக மாறியது அந்த ஆலை உள்ளிட்டு நாடு முழுவதும் உள்ள 23 என்.டி.சி ஆலைகள் கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் செய்யப்பட்டு மூடப்பட்டன. கடந்த 23-02-2020 -இல் மூடப்பட்ட அந்த ஆலைகள்  இது வரை திறக்கப்படவில்லை. 15,000 நிரந்தரத் தொழிலாளிகள் உட்பட பல்லாயிரக் கணக்கான தொழிலாளிகள் வேலை இழந்து உள்ளனர்.

தொழிற்சங்கங்கள் சிஐடியு, எச்எம் எஸ், ஏஐடியூசி உள்ளிட்ட சங்கங்கள் தொழி லாளர்களை திரட்டி எண்ணற்ற பல போரா ட்டங்கள் நடத்தின. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் ஒன்றிய ஜவுளி துறை அமைச்சர் பியூஸ்கோ யலை பலமுறை சந்தித்தும் ஆலைகளை திறந்திட ஒன்றிய அரசு எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே ஆலைகளைத் திறக்க வலுமிக்க போராட்டத்தினை நடத்திட சின்னியம்பாளையம் தியாகிகள் பெயரால் உறுதி ஏற்போம்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர். 
சிபிஐ (எம்) கோவை.