tamilnadu

img

கார்  மோதி உயிரிழந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் -  முதலமைச்சர்    

சென்னையில் கார் மோதி உயிரிழந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

வண்டலூர் வயர்லஸ் காவல் நிலையத்தில் தொழில்நுட்ப உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ஜி.பிரசன்னா அவர்கள் நேற்று இரவு 8.00 மணியளவில் தமிழ்நாடு காவல்துறை தலைமையிடத்தில் இருந்து காமராஜர் சாலையை கடக்கும்போது அதிவேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.  

இந்த விபத்தில் உயிரிழந்த தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் திரு.ஜி.பிரசன்னா குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்தை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

;