tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரி மறைவு: முதல்வர் இரங்கல்
சென்னை, ஏப்.24- ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி. லட்சுமி நாராயணன் மறைவுக்கு முதல மைச்சர் மு.க. ஸ்டா லின் இரங்கல் தெரி வித்துள்ளார். 

“லட்சுமிநாராயணன் 1987-93-இல்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணைய தலைவராக இருந்து திறம்பட  பணியாற்றியவர். லட்சுமி நாராய ணனை இழந்து வாடும் குடும்பத்தினர், முன்னாள், இந்நாள் அதிகாரிகளுக்கு ஆழ்ந்த இரங்கல், ஆறுதல்” என முதல்  வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஆதீனத்துக்கு மிரட்டல்: 
பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை, ஏப்.24- மயிலாடுதுறை யில் உள்ள தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்ற  புகாரில் பாஜக நிர் வாகியும், கல்வி நிறு வனத்தின் தாளாளரு மான கொடியரசு உள்  ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்  பட்டது. சர்க்கரை நோய், இருதய பாதிப்பு இருப்பதால் மேலும் சிறையில்  இருந்தால் உடல் நிலை பாதிக்கப்படும் என மனு தாக்கல் செய்த நிலையில் தாளாளர் கொடியரசின் ஜாமீன் மனு வை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஸ்மோக் பிஸ்கட் வகைகளால் ஆபத்து
சென்னை, ஏப்.24- “திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப் படும் ஸ்மோக் பிஸ் கட் வகைகளை குழந்  தைகளுக்கு கொடுக்க வேண்  டாம்” என உணவு  பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள் ளது. “திரவ நைட்ரஜனால் தயாரிக் கப்படும் உணவுப் பொருட்களை உட் கொள்வதால் உயிரிழப்பு ஏற்படலாம்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புகை வருவதற்கு காரணமான திரவ  நைட்ரஜன் மைனஸ் 196 டிகிரியில் இருக்  கக் கூடிய ஒரு பொருளாகும். இதனை  உணவுப் பொருட்களை பதப்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதனை உட்கொள்ளக்கூடாது.

இசையமைப்பாளருக்கு மட்டுமே பாடல் சொந்தமா? 
சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஏப்.24- இளையராஜா இசையமைத்த பாடல் களை, ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரி மையின்றி நிறுவனங்கள் பயன்படுத்திய தாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறை யீடு செய்யப்பட்டிருந்தது.

அதனை ஏற்று,  இளையராஜா பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், இடைக்கால தடையை நீக்கக்  கோரி ‘எக்கோ’ ரெக்கார்டிங் நிறுவனம் மேல்முறையீடு செய்தது.  இந்த வழக்கு புதனன்று (ஏப்.24) விசார ணைக்கு வந்தது.

இசையமைப்பு என்பது  கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது என இளையராஜா தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.  வழக்கை விசாரித்த நீதிபதி, “வரிகள்,  பாடகர் அனைத்தும் சேர்ந்தது தான் பாடல்  உருவாகிறது.. பாடல் வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை” என்று தெரிவித்  தார்.

மேலும், “பாடலுக்கு பாடலாசிரிய ரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” என்று இளையராஜா தரப்பிடம் கேள்வி எழுப்பினார். இதனடிப்படையில், பாடல்கள் விற் பனை மூலம் இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது மேல்  முறையீட்டு வழக்கு தீர்ப்புக்கு கட்டுப்பட்  டது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: நயினாருக்கு மீண்டும் சம்மன்?
சென்னை, ஏப்.24- சென்னை எழும்பூரில் இருந்து கடந்த  ஏப்ரல் 6 அன்று புறப்பட்ட நெல்லை எக்ஸ்  பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பணம் தேர்தல்  பறக்கும் படையினரால் பறிமுதல் செய்  யப்பட்டது. பணத்தை கொண்டு சென்ற  3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களி டம் நடத்திய விசாரணையில், நெல்லை  பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திர னுக்காக பணத்தை எடுத்துச் சென்றதாக  வாக்குமூலம் அளித்தனர்.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜ ராகும்படி நயினார் நாகேந்திரனுக்கு சம்  மன் அனுப்பப்பட்டது. ஆனால், 10 நாள்  அவகாசம் கேட்டு கடிதம் அளித்திருந்தார். இந்நிலையில், ஆசைத்தம்பி, ஜெய்சங் கர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உற வினரான முருகன் ஆகியோர் தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்தி ரன் மற்றும் அவரது உதவியாளர் மணி கண்டனுக்கு வியாழனன்று (ஏப்.25) மீண்  டும் சம்மன் அனுப்ப காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

அண்ணாமலையின் பொய்ப் பிரச்சாரம்! காவல்துறை மறுப்பு
கடலூர், ஏப்.24- கடலூர் மாவ டடம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரி மானியம் கிராமத் தைச் சேர்ந்த கோமதி கொல்லப்பட்ட விவ காரத்தில் முன்விரோ தம் காரணம் என்றும், கொலைக்கு காரணமானவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறை விளக்கம் அளித் துள்ளது.

மேலும் இவ்வழக்கில் ஐந்து பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். பாண்டி யன், அருள் செழியன் மற்றும் ராஜா ஆகி யோரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இவ்வழக்கில் பாதிக்கப்  பட்ட குடும்பத்தாரே தங்களது புகாரில் கடந்த 2021-ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை திரும்பப் பெறுவது குறித்து  தகராறு தான் கோமதியின் இறப்பிற்கு காரணம் என தெரிவித்ததாக காவல்துறை  தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணை முடிந்த நிலை யில் இறப்புக்கான காரணம் குறித்து  மருத்துவ அறிக்கை பெறப்பட்டதும், உரிய காலத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கையை நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்படும் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலத் தொழிலாளர்க்கு ஊதியத்துடன் விடுப்பு
சென்னை, ஏப்.24- 18-ஆவது மக்களவைப் பொதுத் தேர்தல்- கேரளத்தில் ஏப்ரல் 26 அன் றும், ஆந்திராவில் மே 13 அன்றும், கர்  நாடகத்தில் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26 அன்றும், 2-ஆம் கட்டத் தேர்  தல் மே 7 அன்றும் நடைபெறும் நிலை யில், வாக்குரிமை உள்ள தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர் களும் அவர்கள் தம் சொந்த மாநி லத்திற்கு சென்று வாக்களிக்க வேண்டி யுள்ளது.

இதற்கு ஏதுவாக தேர்தல் நாட்க ளில் வெளிமாநிலத்தவரை பணி அமர்த்தியுள்ள சம்பந்தப்பட்ட நிறு வனங்களின் உரிமையாளர்கள் அவர்  களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு  வழங்க வேண்டும் என்று தமிழக  தொழிலாளர் ஆணையர் ஏ. சுந்தர வல்லி உத்தரவிட்டுள்ளார்.