tamilnadu

துணைவேந்தர் இல்லாத சென்னை பல்கலை! நீதிபதிகள் அதிருப்தி

சென்னை, ஏப்.24- தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி யின் பிடிவாதத்தால், சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த ஓராண்  டாக துணைவேந்தர் இல்லாத  நிலையில் உள்ளது. இந்நிலை யில், துணைவேந்தர் நியமிக்கப்  படாததன் காரணமாக மாணவர் களின் கல்வி பின்னுக்குத் தள் ளப்பட்டு உள்ளதாக உயர் நீதி மன்ற நீதிபதிகள் வேதனை தெரி வித்துள்ளனர். சென்னை பல்கலைக்கழ கத்தில் காலியாக உள்ள துணை வேந்தர் பதவியிடத்தை நிரப்பு வது தொடர்பாக, வழக்கறிஞர் பி.  ஜெகந்நாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ. சத்ய நாரா யண பிரசாத் ஆகியோர் அடங்  கிய அமர்வில் மீண்டும் விசார ணைக்கு வந்தது. பல்கலைக்கழ கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.  வில்சன் ஆஜராகி இதுதொடர் பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதை சுட்டிக்காட்டினார். அப்போது தான் மேற்கண்ட வாறு தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்திய நீதிபதிகள், விசாரணையை ஜூன் 5-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.