tamilnadu

img

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக 50 மையங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, அக்.1 - தொழிற்சங்க உரிமைக்காக காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ள சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக செவ்வாயன்று (அக்.1) மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை நந்தனம் நிதித்துறை வளாகத்தில் உள்ள வணிகவரி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.டேனியல் ஜெயசிங் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், மாநிலம் முழுவதும் 50 அரசு அலுவல கங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களில் பல்வேறு துறைகளை சேர்ந்த 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்றார்.