சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணியாற்றும் என்எம்ஆர் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலியாக தினசரி 362ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (ஜூன் 26) முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் நடைபெற்றது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத் தொழிலாளர் சங்கம் சார்பில் அண்ணாசாலை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பழனி தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜன், நிர்வாகிகள் சி.சத்யநாதன், ரமேஷ், ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.