tamilnadu

img

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளில் தாமதம்!

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளில் தாமதம்!

சென்னை, ஏப்.21- சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஆறு சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் தாமதமா வதால் நகரத்தின் பல்வேறு இடங்களில் செயல்படாமல் உள்ளன. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஆறு டிபிஎம் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் தற்போது நகரத்தின் பல்வேறு இடங்களில் செயல்படா மல் இருப்பதாக கூறப்படுகிறது. ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் அனைத்தும் தாமதமாவதால், இந்த இயந்திரங்கள் முன்னேற முடி யாமல் ஒரே இடத்தில் நிற்கின்றன. மூலக்கடை, பெரம்பூர் மற்றும் மந்தைவெளி ஆகிய இடங்களில் இந்த இயந்திரங்கள் பூமிக்கு அடியில் சிக்கியுள்ளன. ஒரு மெட்ரோ ரயில் நிலையம் கட்டப்பட்ட பிறகு தான் அதன் சுற்றுச்சுவர் முழுமையாக முடிந்தால்தான், இயந்திரங்கள் அந்த நிலை யத்திற்குள் நுழைய முடியும். அதன் பிறகு, இயந்திரங்களை பிரித்து, அடுத்த வேலைக்கு அனுப்ப முடியும். தற்போது, மாதவரம் ஹை ரோட்டில் இருந்து புறப்பட்ட இரண்டு TBM இயந்திரங்கள் மூலக்கடை மெட்ரோ ரயில் நிலை யத்திலும், அயனாவரத்தில் இருந்து வந்த இரண்டு இயந்திரங்கள் பெரம்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திலும், கிரீன்வேஸ் சாலையில் இருந்து வந்த இரண்டு இயந்திரங்கள் மந்தைவெளி மெட்ரோ ரயில் நிலையத்திலும் காத்திருக்கின்றன. 4 வருடங்களுக்கு  முன்பு டெண்டர் ரத்து இந்த தாமதத்திற்கு பல கார ணங்கள் உள்ளன என்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அதிகாரி கள் கூறுகின்றனர். அதில் முக்கியமான காரணம், நான்கு வருடங்களுக்கு முன்பு டெண்டர் ரத்து செய்யப்பட்டதுதான். இரண்டாம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியான மாதவரம் முதல் சிப்காட்  வரையிலான சுரங்கப்பாதை கட்டுமானத்திற்காக, சி எம் ஆர் எல் டெண்டர் வெளியிட்டது. இதுகுறித்து அதிகாரி ஒரு வர் கூறுகையில், "மாதவரம் மற்றும் தரமணி இடையே உள்ள சுரங்கப்பாதை நிலைய கட்டுமானத்திற்கான 6 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன. டெண்டர் எடுத்தவர்கள் அதிக விலை நிர்ணயித்ததால், டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக, மீண்டும் டெண்டர் விட வேண்டியிருந்தது. இதனால், நிறைய நேரம் வீணாகிவிட்டது. எனவே, இந்த வழித்தடத்தில் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் தாமதமாகின" என்றார். மேலும்,  இயந்திரங்கள் சரியான நேரத்தில் வேலையைத் தொடங்கினாலும், ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் தாமத மானதால், இயந்திரங்களின் வேகம் குறைந்துவிட்டது என்றும் அவர் கூறினார். இப்போது, இயந்தி ரங்கள் வேலையை முடித்துவிட்டு காத்திருக்கின்றன. ரயில் நிலைய பணிகளை விரைவுபடுத்த நட வடிக்கை எடுத்து வருகிறோம். அடுத்த மாதம் முதல், அனைத்து டிபிஎம் இயந்திரங்களும் இந்த வருட இறுதிக்குள் படிப்படியாக செயல்படத் தொடங்கும்" என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.