tamilnadu

img

சென்னை: 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னையில் ஓட்டேரி, ஏழுகிணறு உள்ளிட்ட 5 இடங்களில் பணப் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. பணப்பட்டுவாடாவைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது., சென்னை வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் வடசென்னை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் தேர்தலை ஒட்டி பணப் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் வழங்கவிருப்பதாக வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை ஓட்டேரி, ஏழு கிணறு உள்ளிட்ட ஐந்து இடங்களில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஏழு கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சக்கரா தெருவில் இன்துராம் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதேபோல் சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் ஒருவர் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் பட்சத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.