சென்னை ஐஐடி விடுதியில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஐஐடி-யில் மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்ரீவன் சன்னி எனும் இரண்டாம் ஆண்டு முதுநிலை ஆராய்ச்சி மாணவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு உடல் கூறாய்வு செய்ய ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, மன உளைச்சல் காரணமாக ஸ்ரீவன் சன்னி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
அதே நேரத்தில், சென்னை ஐஐடி-யில் மற்றொரு மாணவர் தற்கொலை முயற்சி செய்த நிலையில், அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.