tamilnadu

img

பிபிசி ஆவணப்படம் பார்த்த கவுன்சிலர் பிரியதர்ஷினி கைது!

2002 குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப்படத்தை பார்த்ததற்காக சென்னை 98-வது வார்டின் கவுன்சிலர் பிரியதர்ஷினி கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணாநகர் டி.பி.சத்திரத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 2002-ஆம் ஆண்டு நடந்த குஜராத கலவரம் குறித்த பிபிசியின் ஆவணப்படத்தை மொபைலில் திரையிட்டனர். இதில் சென்னை மாநகராட்சியின் 98-வது வார்டின் கவுன்சிலர் பிரியதர்ஷினி கலந்துக்கொண்டார். சாலையில் அமர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் கவுன்சிலர் பிரியதர்ஷினி, செல்போனில் பிபிசி ஆவணப்படத்தை பார்த்தார். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், கவுன்சிலர் பிரியதர்ஷினி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்தனர்.