tamilnadu

img

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : தென்மேற்கு பருவக்காற்று காரணமாகத் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . 

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி , கோவை , சேலம் , வேலூர் , ராணிப்பேட்டை , சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் , தென்மேற்கு அரபிக்கடல் , வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கி.மீ. வேகத்திலும் , இடையிடையே 7௦ கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளில் மீனவர்கள் ஐந்து நாட்களுக்குக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

;