tamilnadu

img

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாகத் தமிழ்நாட்டில், நீலகிரி, கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் வட  தமிழகக் கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

;