tamilnadu

img

தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை, அக். 23- தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு  மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறி விப்பில் கூறியிருப்பதாவது: "லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி களில் (1.5 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, ஞாயிறன்று  (அக். 24) கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, சேலம், திருப்  பத்தூர், திருவண்ணாமலை, மதுரை மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்கள், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலு டன் கூடிய மிதமான மழையும், ஏனைய கடலோர  மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதி களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி  நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

;