tamilnadu

img

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜன.04-

அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு  வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு  வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வடகடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

;