tamilnadu

சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை,ஏப்.20- தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சூறைக் காற்றுடன் கூடிய மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு உள் கர்நாடகா முதல் மத்திய இந்திய பெருங்கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதாலும், வெப்பச்சலனத்தாலும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏப்.22 ஆம் தேதி ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம், கோவை, திருநெல்வேலி ஆகிய 14 மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;