சென்னை, ஆக. 4 - தலித், பழங்குடிகளில் உள் இடஒதுக்கீட்டை அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்புக்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.
“இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட நோக்கத்தை நிறை வேற்றும் வகையில், சமூகத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சரியான வாய்ப்புகளை வழங்கு வதற்கு உள் ஒதுக்கீடு அவசியமானதாகும். ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப் பட்டால், உரிய தரவு களோடு ஒதுக்கீடு சரி யாக சென்றடைய தக்க நட வடிக்கைகளை எடுக்க முடியும்.
ஆனால், 2020-ல் நடத்தி இருக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெ டுப்பை, கொரோனாவை காரணம் காட்டி மோடி யின் ஒன்றிய அரசு தள்ளிப் போட்டது. நான்கு ஆண்டு காலமாகி யும் கணக்கீட்டை நடத்த மறுத்து வருகிறது. ஒரு நாட்டின் சமூக, பொருளாதார சூழல்களை சரி யாக அடையாளம் காண மக்கள் தொகை கணக்கீடு மிகவும் முக்கிய மானது. எனவே, உடனடியாக ஜாதி வாரி கணக்கீட்டை உள்ளடக்கி, மக்கள் தொகை கணக்கீட்டுக்கான நடவடிக்கைகளை துவக்கு மாறு ஒன்றிய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது” என முத்தரசன் குறிப்பிட்டுள் ளார்.