சென்னை,ஆக.29-
இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசின் சேவைகளை விரைவாக பெறுவதற் காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளது. இதன்மூலம் மாநிலம் முழு வதுமுள்ள லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயனடைந்து வருகின்ற னர்.
இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் முறையை அறிமுகம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இ-சேவை மையங்களை ‘டிஜிபே’ வரம்பிற்குள் கொண்டு வந்த பிறகு, ஆதார் பயோமெட்ரிக் வாயிலாக வங்கிக் கணக்கிலிருந்து எளிதாக பணம் எடுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது