சென்னை, மார்ச் 25- சென்னை புளியந்தோப்பில் தேர்தல் விதிமுறை மீறியதாக பாரதிய ஜனதா கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் வேட்பாளர் கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அர சியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந் துள்ளது. இதில் தேர்தல் விதிமுறை களை மீறுவோர் மீது தேர்தல் ஆணை யம் அளிக்கும் புகாரின் அடிப்படை யில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வரு கின்றனர்.
இந்நிலையில் புளியந்தோப்பு பட்டாளத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தேர்தல் ஆணை யத்தின் அனுமதியின்றி பாஜகவினர் சனிக்கிழமை பிரசாரம் செய்தனர். இந்த பிரசார நிகழ்ச்சியில் அந்த கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.
இது தொடர்பாக திருவிக சட்டப் பேரவை தொகுதி தேர்தல் ஆணைய அதிகாரி வி.மோகன், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறியதாக வினோஜ் பி.செல்வம், அந்த அடுக்கு மாடி குடியிருப்பு சங்கத் தலைவர் லலித் பாந்தா முத்தா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வரு கின்றனர்.