tamilnadu

நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு வழங்கிய ஆணை ரத்து

சென்னை,செப்.20- திருப்பத்தூர் மாவட்டம், நாயக்க நேரி ஊராட்சிமன்ற தலைவர் பதவியை பட்டிய லின பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணையை ரத்து செய்துள்ள சென்னை  உயர்நீதிமன்றம், ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலின பெண் தேர்வு செய்யப்பட்டதையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மாதனூர் ஒன்றியம் நாயக்க நேரி ஊராட்சி தலைவர் பதவி  பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப் பட்டதை எதிர்த்து முன்னாள் ஊராட்சி  மன்றத் தலைவர் சிவகுமார், முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வராஜ் ஆகி யோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், பட்டியலினத்தவர் ஒருவர் கூட தங்கள் கிராமத்தில் இல்லாத நிலையில் நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டிய லின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (செப்.20) சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி ஜி.கே. இளந்திரை யன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவியை பொதுப்பிரிவை சேர்ந்த பெண் அல்லது பழங்குடியின பெண்ணுக்கு 4 வாரங்களில் ஒதுக்க நீதிபதி உத்தரவிட்டார். ஒதுக்கீடு செய்த பின் தேர்தல் நடத்தி புதிய ஊராட்சி தலைவரை தேர்ந்தெடுக்கவும் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.