திருவேற்காட்டில் பிரச்சாரம்
வேலையின்மை, விலைவாசி உயர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆவடி தொகுதிக்குழு சார்பில் திருவேற்காட்டில் நடைபெற்ற பிரச்சாரத்தை மாவட்டக்குழு உறுப்பினர் மா.பூபாலன் தொடங்கி வைத்தார். இதில் பகுதிச் செயலாளர் (பொறுப்பு) எம்.ராபர்ட்ராஜ், வெங்கடேசன், மனோகரன், ராமமூர்த்தி, சுப்பிரமணி, கே.எம்.தியாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.