விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த தேர்தல் பொதுப் பார்வையாளர் அமித் சிங் பன்சாலை, மாவட்ட தேர்தல் அலுவலர் சி.பழனி வெள்ளியன்று பூங்கொத்து வழங்கி வரவேற்றார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச்,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன்,ஆகியோர் உடனிருந்தனர்.