tamilnadu

img

காலை உணவுத் திட்டத்தால் மாணவர் வருகை அதிகரித்துள்ளது!

சென்னை, ஆக. 6 - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத் தால் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது என்றும், இதை விட மகிழ்ச்சியான செய்தி இருக்க முடியாது எனவும் மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள் ளார்.

மாநில திட்டக்குழுவின் ஐந்தாவது கூட்டம், தமிழ்நாடு முதலமைச்சரும், திட்டக் குழுத் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஆக.6) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர், மாநில திட்டக் குழுவில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றி விரி வாக எடுத்துரைத்தார். புதுமைப் பெண் திட்டத் தின் தாக்கம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களி டம் ஏற்பட்டுள்ள தாக்கம், எண்ணும் எழுத்தும் திட்டச் செயலாக்கத்தின் மதிப்பீடு போன்ற ஆய்வு முடிவுகள்  குறித்தும் விவரித்தார்.

இக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “காலை உணவுத் திட்டத் தால் மாணவர்களின் பள்ளி வருகை உயர்ந்துள் ளது என்பதை அறிந்தேன். இதனைவிட மகிழ்ச்சி யான செய்தி வேறு எதுவும் இருக்க முடியாது.  மகளிர் உரிமைத் தொகை மூலமாக பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் அதிகமாகி இருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லா விடி யல் பயணம் மூலமாகப் பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி உள்ளது. புதுமைப் பெண் திட்டத்தின் காரணமாக கல்லூரிக்குச் செல் லும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள் ளது. இப்படி ஒவ்வொரு திட்டமும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் உயர்த்தி வருகிறது. 

இந்த தகவல்களை எல்லாம் மக்களிட மிருந்து நேரடியாக நாங்கள் அறிந்தாலும், புள்ளிவிவரங்களாக திட்டக்குழுவாகிய நீங்கள் வழங்கி வருகிறீர்கள்” எனக் குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்தார்.

\தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி  மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில்  நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளா தார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சி யாக இருக்க வேண்டும். 

பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர  வேண்டும். ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் இல்லை என்பதை உருவாக்க வேண்டும். இதே அடிப்படையில்தான், கடந்த மூன்றாண்டுகளாக எண்ணற்றத் திட்டங்களைத் தீட்டினோம். இன்னும் புதிய திட்டங்கள் வர இருக்கின்றன என்றும் முதல்வர் தெரிவித்தார்.

நிதி அயோக் அறிக்கை

அண்மையில் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை, மிக மிக மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அந்த அறிக்கையை முன் மாதிரியாக கொண்டு உங்களது ஆய்வறிக்கை ஒன்றை வழங்கு மாறு கேட்டுக் கொள்கிறேன். நிதி வளம் இருக்கு மானால், இன்னும் பல திட்டங்களை நம்மால் உருவாக்க முடியும். நிதி வளத்தை பெருக்கும் ஆலோசனைகளைச் சொல்லுங்கள். அறி விக்கப்படும் திட்டங்கள் அனைத்து மனிதர் களையும் உடனடியாகச் சென்று சேரத் திட்ட மிடுங்கள். காலதாமதமின்றி அனைத்துப் பயன்களையும் மக்கள் பெற்றாக வேண்டும்.  அதற்கான இலகுவான நிர்வாகச் சீர்திருத்தங் களைச் சொல்லுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநிலத் திட்டக்குழு துணைத் தலை வர் பேராசிரியர் ஜெயரஞ்சன், தலைமைச் செய லாளர் சிவ் தாஸ் மீனா,  கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், குழு உறுப்பினர்கள் பேராசிரியர் இராம. சீனு வாசன், பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், மு.தீனபந்து, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்  நா. எழிலன், மருத்துவர் ஜோ. அமலோற்பவ நாதன், சித்த மருத்துவர் கு. சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ், மாநில திட்டக்குழு வின் உறுப்பினர் செயலர் (முழு கூடுதல் பொறுப்பு) எஸ். சுதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.