tamilnadu

img

செப் 1 முதல் ஆந்திரா , கர்நாடகா மாநிலங்களுக்குப் பேருந்து போக்குவரத்து - தமிழக அரசு 

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 23 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் , முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தையடுத்து தமிழகத்தில் பல முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன் , ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . 

அதன்படி , ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு பொது போக்குவரத்து பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது . மேலும் , பொது போக்குவரத்து பேருந்துகளில் செல்லும் பயணிகள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

;