அம்பத்தூர், அக். 29- குன்றத்தூர் மணஞ்சேரியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (42). இவர் தீபாவளி உள்ளிட்டு மற்ற நேரங்களி லும் பட்டாசு விற்பனை செய்வது வழக்கம். மேலும் தீபாவளி பண்ட் நடத்துபவர்களுக்கும் மொத்தமாக பட்டாசு விநியோகம் செய்து வந்துள் ளார். இதற்காக ரூ 30 லட்சம் மதிப் பீட்டில் பல்வேறு வகையான பட்டாசு களை சிவகாசியில் இருந்து மொத்த மாக வாங்கி வந்து குன்றத்தூர் அருகே கரைமா நகரில் ஒரு குடோனில் இருப்பு வைத்திருந்தார்.
இதுபற்றி குன்றத்தூர் தாசில்தா ருக்கு புகார்கள் சென்றன. இதைய டுத்து தாசில்தார் நாராயணன் மற்றும் வருவாய் துறையினர், காவல் துறை யினர் குடோனுக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அரசு அனுமதி பெறாமல் பட்டாசுகளை குடோனில் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்து, குடோனுக்கு சீல் வைத்தனர்.