tamilnadu

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

சென்னை,ஜூன் 26 சிங்கப்பூரிலிருந்து லண்டனுக்கு 327 பயணிகளுடன் சென்ற பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் பெண் பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னையில் செவ்வாயன்று (ஜூன் 25) நள்ளிரவில் விமானம் அவசரமாக தரையிறக்க ப்பட்டது.  இங்கிலாந்தை சேர்ந்த பயணி ரோனா கிளமெண்டுக்கு விமான நிலைய மருத்துவக்குழுவினர் முதலுதவி வழங்கி, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனை தொடர்ந்து அந்த விமானம் புதனன்று காலை லண்டன் புறப்பட்டு சென்றது.