tamilnadu

img

ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை தேர்தல் களத்திற்கு கொண்டுவாருங்கள்...

சென்னை:
2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில் விவாதிக்கப்பட வேண்டிய ஒடுக்கப்பட்ட மக்களின்  கோரிக்கைகளைத் தொகுத்து சமூக நீதி சாசனமாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களிடம் சமூகநீதி சாசனத்தை வழங்கி கட்சிகளின்  தேர்தல் அறிக்கைகளில் இக்கோரிக்கைகளை இணைக்குமாறு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தி.மு.க பொருளாளர்   டி.ஆர். பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய தேசிய காங்கிரஸின்  கோபண்ணா,மதிமுக தலைமை நிலைய செயலாளர் வந்தியத் தேவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.ஜவாஹிருல்லா,திராவிடர் கழக பொதுச் செயலாளர் வி.அன்புராஜ் ஆகியோர்களைச் சந்தித்து சமூகநீதி சாசனம் வழங்கப்பட்டது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் மற்றும் க. சுவாமிநாதன், வி. ஜானகிராமன், கே.மணிகண்டன், எஸ்.சந்தானம்,பி.ஆர்.முரளி ஆகியோர் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்தனர்.

;