tamilnadu

img

கழிவுநீர் கலந்த தண்ணீர் குடித்து சிறுவன் உயிரிழப்பு மாதிரி நீரை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை

சென்னை, ஜூன் 29- கழிவு நீர் கலந்த தண்ணீரை குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் மாதிரி நீர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புதிய மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மூளை ரத்தக் குழாய்களில் ஏற்படும் ரத்தம் உறை தலால் ஏற்படும் திடீர் பக்கவாதங்களை கண்டறி வதற்கும், ரத்தக் குழாய் களில் ஏற்படும் உறைவை அகற்றுவதற்கான சிகிச் சையை வழங்கும் ஆய்வ கம் ஆகியவை ரூ.10  கோடியே 92 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு நம்  மாநில அரசு மருத்துவமனை களில் மருத்துவ உபகரணங் கள் தொடர்ந்து பயன் பாட்டுக்கு வந்து கொண்டி ருக்கிறது. எம்ஆர்ஐ அறைகளில் நோயாளிகளுக்கு மயக்க மருந்து செலுத்தும் உப கரணமும், இதயம் மற்றும்  நுரையீரல் அறுவை சிகிச் சைக்கான கருவிகளும், அதிநவீன லேசர் கருவி யும், போதை மருந்து கண்டறி யும் தானியங்கி கருவியும்  பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

காற்று மாசை அளப்பதற்கான கரு வியும் சனிக்கிழமையன்று பொருத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். சைதாப்பேட்டை அபித் காலனியில் கழிவு நீர் கலந்த  குடிநீரை குடித்து சிறுவன் உயிர் இழந்தது தொடர்பாக கேட்ட கேள்விக்கு, பீகாரைச் சேர்ந்த சிறுவன் 10 நாட்களுக்கு முன்பு தான்  சைதாப்பேட்டையில் குடி யேறியதாக சொன்னார்கள். நான் சட்டப்பேரவையில் இருந்ததால் எனக்கு தெரியாது. வெளியே வந்த பிறகுதான் தகவல் சொன்னார்கள். அதிகாரிகள் ஆய்வுக்கு சென்ற போது வீட்டில் பழைய சாதம் இருந்துள்ளது.

அந்தப் பகுதி யில் கடந்த ஒரு வாரமாக மெட்ரோ நிர்வாகம் தண்ணீர் மாசு தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்கள். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியும்  சென்று ஆய்வு  செய்துள்ளார். குழந்தை எதனால் இறந்தது என்பதை கண்டு பிடிக்க தண்ணீரின் மாதிரி கள் ஆய்வகத்திற்கு அனுப் பப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு சென்னை மாந கராட்சி ஆணையர் சென்று ஆய்வு செய்துள்ளார். கடந்த ஒரு வாரமாக மெட்ரோ நிர்வாகம் குழாய் களில் எங்கே ஓட்டை விழுந் துள்ளது என்பது தொடர் பாக ஆய்வு செய்து வருகிறார்கள் எனத் தெரி வித்தார்.