தமுஎகச மாநில துணைச் செயலாளர் கருப்பு அன்பரசன் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘எழுத்துக்களைப் பற்றி சில வார்த்தைகள்’, ‘மேலெழும் சொற்கள்’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சனிக்கிழமையன்று (ஜூன் 30) சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் கீரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூல்கள் முறையே இயக்குநர் வசந்தபாலன், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் வெளியிட, ரிசர்வ் வங்கி பொது மேலாளர் எஸ்.இளங்கோ, உதவிப் பொது மேலாளர் டி.ஆர். ராதாகிருஷ்ணன், பேரா.மகாலிங்கம் உள்ளிட்ட படைப்பாளிகள் பெற்றுக் கொண்டனர். பாரதி புத்தகாலயம் க.நாகராஜன், நாடக கலைஞர் அசோக் சிங், எழுத்தாளர் மணிநாத், தொல்லியல் ஆய்வாளர் மா.சிந்தனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.