சிறைவாசிகளுக்கு புத்தகம் வழங்கல்
கடலூர் கோவன் நுரையீரல் சிகிச்சை மையம் சார்பாக மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் சிறைவாசிகளுக்கு 120 புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், சிறைத்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர் ஜெயமணி , கோவன் நுரையீரல் மையத்தின் நிறுவனர் மரு. பால.கலைக்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.