மூத்த வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன் எழுதிய ‘இலங்கை முருகனும், மலேசிய முருகனும்’ நூல் வெளியீட்டு விழா ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றம் அரங்கில் நீதியரசர் எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் செவ்வாயன்று (செப்18) நடைபெற்றது. இதில் நீதியரசர் து.அரிபரந்தாமன் நூலை வெளியிட, வழக்கறிஞர் கே.ராஜசேகரன், கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, கவிஞர் இரா.தெ.முத்து ஆகியோர் பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள், நூலாசிரியர் செந்தில் நாதன், கே.பக்தவச்சலம் (ஒய்எம்சிஏ அரங்கம்), வழக்கறிஞர் கே.ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.