சென்னை, நவ. 27 - சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் இயங்கி வரும் ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தின்’ இயக்குநராகப் பதவி வகித்து வருபவர் பாஜக ஆதரவாளர் தேவநாதன் யாதவ். கடந்த மக்கள வைத் தேர்தலின்போது, சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக வும் போட்டியிட்டவர்.
இந்நிலையில், தேவநாதன் யாதவ், அவரது கட்டுப்பாட்டில் உள்ள தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ. 24 கோடியே 50 லட்சத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமைநாதன், தேவசேனாதிபதி மற்றும் சுதீர்சந்தர் ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீ சார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்களில் சாலமன் மோகன்தாஸ் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நவம்பர் 13 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மயிலாப்பூர் முதலீட்டாளர்கள் நலச்சங்கத் தலை வர் சதீஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
அதில், “இந்த விவகாரத்தில் ரூ. 300 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதால் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நவம்பர் 27 அன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ், “இந்த விவகாரம் தொடர்பாக அம லாக்கத்துறைக்குக் கிடைத்த தகவல் மூலம் வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே மயி லாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர் பாக அதன் தலைவர் தேவநாதன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப் படும்” என உறுதியளித்தார். இதனைப்பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் விரை வாக நடவடிக்கை எடுக்க அம லாக்கத்துறைக்கு உத்தரவிடப்படு கிறது” எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.