பொருளாதார கொள்ளையை மறைக்க மதவெறியை தூண்டும் பாஜக
சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் பேச்சு
சென்னை, மே 19 - பொருளாதார கொள்ளையை மறைக்க ஒன்றிய பாஜக அரசு மத வெறியை தூண்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் கூறி னார். ‘தமிழகமே, ஒன்றிய அதிகாரக் குவிப்பைத் தடுத்திடு! மாநில தன்னாட்சிக்குப் போராடு!’ எனும் தலைப்பில் சனிக்கிழ மையன்று (மே 17) சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. மக்கள் அதி காரம் அமைப்பு நடத்திய இந்த நிகழ்வில், கே.சாமு வேல்ராஜ் பேசியதன் சுருக்கம் வருமாறு: சாதியத்தை, சாதி அமைப்புகளை பலப்படுத்தி பயன்படுத்தி கொள்ளும் ஆர்எஸ்எஸ்-பாஜக, போலியான தேசிய வெறியை மிக தீவிரமாக பரப்புகிறது. பொருளாதார கொள்ளைகளை மூடி மறைக்க இதனை செய்கின்ற னர். ஜனநாயக அமைப்பு கள் மீது தாக்குதல் மிகக்கடு மையாக தாக்குகின்றனர். இந்தியாவில் பொரு ளாதார சமத்துவமின்றி அதிகரித்துள்ளது. அமெரிக்காவை விட இந்தியாவில் பொரு ளாதார ஏற்றத்தாழ்வு அதிக மாக உள்ளது. மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டினரிடம், இந்தியாவின் செல்வத்தில் 40 விழுக்காடு உள்ளது. இது ஆண்டுக்கு 23 விழுக் காடு வளர்கிறது. 50 விழுக் காடு அடித்தட்டு மக்க ளிடம் 3 விழுக்காடு செல்வங்கள்தான் உள்ளன. இதனை மறைக்க மத வெறி, சாதிவெறி கூர்தீட்டப்படு கிறது. கண்மூடித்தனமாக கார்ப்பரேட்டை ஆத ரிக்கிறார்கள். கார்ப்பரேட்டு களும் மதவெறி சக்திகளை கண்மூடித்தனமாக ஆத ரிக்கின்றனர். இதைத்தான் கார்ப்பரேட் - இந்துத்துவா என்கிறோம். இந்த கொள்ளையை திசை திருப்ப, போர் வெறியை தூண்டுகிற, கொண்டாடுகிற மன நிலையை பரப்புகின்றனர். போலி தேசிய வெறியை ஊட்டுகின்றனர். ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கையால் வஞ்சிக் கப்படுகிற மக்களையே திரட்டி, ஆக்ரோஷமாக வேலை செய்ய வைக்கின்ற னர். வஞ்சிக்கப்பட்ட மக்களை நம்மால் திரட்ட முடியாதா? கல்வி உரிமை, மொழிவாரி மாநில உரிமை, குறைந்த பட்ச பொரு ளாதார உரிமைகள் போன்றவையெல்லாம் கடுமையான போராட்ட த்திற்கு பிறகு கிடைத்தவை. அவையெல்லாம் பறிக்கப் படுகிறது. இதையெல்லாம் தடுக்க முடியும் நம்பி க்கையோடு இடதுசாரிகள் ஒன்றுபட்டு இருக்கிறோம். ஜூலை 9ந் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்க ளின் போராட்டம் மட்டு மல்ல. ஒவ்வொரு பொது வேலைநிறுத்தமும் பெரும் தாக்கத்தை உரு வாக்கிறது. ஒவ்வொரு பொதுவேலைநிறுத்தமும் ஒன்றிய அரசுக்கு பலத்த பின்னடைவை தரு கிறது. ஒவ்வொரு பொது வேலைநிறுத்தமும் புரட்சிக்கான ஒத்திகை. இலக்கை நோக்கி முன்னேறும் ஒத்திகை. அத்தகைய பொது வேலைநிறுத்தை தமிழ கத்தில் மகத்தான வெற்றி பெறச் செய்வோம். இவ்வாறு அவர் கூறி னார்.