சென்னை, ஜூலை6- “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்னால் அரசியல் காரணம் இல்லை. அதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளது” என்று சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விவரித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணிக்கு வேணுகோபால் சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலை வர் ஆம்ஸ்ட்ராங்கை (52) அவரது வீட்டின் முன்பு அடையாளம் தெரி யாத சிலர் கத்தியால் தாக்கினர். தகவ லறிந்த காவல் துறையினர் உடனடி யாக சம்பவ இடத்துக்குச் சென்று, காயம் அடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அவரை பரி சோதித்த மருத்துவர்கள், ஆம்ஸ்ட்ராங் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இது தொடர்பாக, இறந்த ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி கொடுத்த புகாரின் பேரில் செம்பியம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொலையாளிகளைப் பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள், சம்பவ இடத்தின் செல்போன் டவர்களை ஆய்வு செய்து பொன்னை பாலு, திருவேங்கடம், சந்தோஷ், ராமு, திருமலை, மணி வண்ணன், செல்வராஜ் மற்றும் அருள் ஆகிய 8 பேரை பிடித்து விசா ரணை நடத்தினோம். இந்த விசா ரணையின்படி, 8 பேரும் குற்றவாளி கள் என முடிவு செய்யப்பட்டு கைது செய்யப்ட்டுள்ளனர்.
அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இவ்வழக்கில் தொடர் புடைய பிற குற்றவாளிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்ப வத்தின்போது, ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்த அவருடைய சகோதரர் வீரமணி மற்றும் அவருடைய நண்பர் பாலாஜி மற்றும் ஓட்டுநர் அப்துல்கனி ஆகியோரும் தாக்குத லில் காயமடைந்துள்ளனர். அவர்க ளுக்கு உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது நிலைமை அங்கு கட்டுக்குள் உள்ளது.
மேலும், முக்கியமான இடங்க ளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொலை வழக்கில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் நிறைய தகவல் கள் கிடைத்துள்ளது. இந்தக் கொலைக்கான காரணம், யாருக் கெல்லாம் தொடர்பு உள்ளது, என்ன மாதிரியான ஆயுதங்கள், வாகனங்கள் எல்லாம் பயன்படுத்தப்பட்டது போன்ற விவரங்களை எல்லாம் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சரியான முறையில் விசாரித்து, நீதி மன்றத்தில் தண்டனைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த போது, “கொலைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வரு கின்றனர். இது அரசியல் காரணங்களுக் கான கொலை இல்லை. அதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளது. அவர் ஆரம்ப வாழ்க்கை யில் இருந்து அரசியலுக்கு வந்த பிறகு, சில நேரங்களில் அவருக்கு பிரச்சினை இருந்துள்ளது. அரசியல் காரணங்கள் தாண்டி, குழு ரீதியான பிரச்சினை இருந்துள்ளது. எனவே, அந்தக் கோணத்தில்தான் நாங்கள் விசாரித்து வருகிறோம். அரசியல் காரணங்களுக்கு மிகக் குறைவான வாய்ப்பே உள்ளது,” இவ்வாறு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறினார்.