tamilnadu

img

பொங்கல் தொகுப்பு கோரி ஜன.12-ல் ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டம்.... சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு....

சென்னை:
ஆட்டோ தொழிலாளர்களுக்கு பொங்கல்தொகுப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி 12 அன்று நலவாரிய அலுவலகம் முன்பு பொங்கல் வைத்து போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) அறிவித்துள் ளது. இதுகுறித்து சம்மேளனத்தின்  பொதுச்செயலாளர் எம்.சிவாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கலுக்கு வழங்கும் சிறப்பு தொகுப்பை ஆட்டோ தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜனவரி 12 அன்று நலவாரிய அலுவலகம் முன்பு பொங்கல் வைத்து போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) முடிவு செய்துள்ளது. பாண்டிச்சேரியில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பண்டிகை கால நிதி வழங்குவதுபோல், தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதுபோல், ஆட்டோ தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜனவரி அன்று தமிழகம் முழுவதும்நலவாரிய அலுவலகம் முன்பு பொங்கல் வைத்து போராட்டம் நடத்தி, பொங்கல் தொகுப்பு வழங்கிட வேண்டும் என தமிழகம்முழுவதும்  நலவாரிய அலுவலகத்தில் மனு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;