tamilnadu

img

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை: வானிலை மையம்....

சென்னை:
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு கடற்கரை மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள்,  கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங் கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் புதுச் சேரி, காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில்  கனமழையும், ஏனைய மாவட்டங் களில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது.சென்னையை பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள் ளது.

;