சென்னை, ஜூன் 11- தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 24 அன்று துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு திங்களன்று (ஜூன் 11) நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர் தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டி ஜூன் 20 அன்றே தொடங்கும்” என்று அறிவித்துள்ளார்.
காங். எம்எல்ஏ பதவியேற்பு
மேலும், தனது பேட்டியில், “கன்னியா குமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பெர்ட் சட்டப்பேரவை உறு ப்பினராக ஜூன் 12 அன்று பதவி ஏற்கிறார். பேரவை அலுவலகத்தில் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது” என்று தெரிவித்த சபாநாயகர் மு. அப்பாவு, “அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை அலுவலகத்தில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது” என்றும் “அதில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது? துறை வாரியாக மானி யக் கோரிக்கைகளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது உட்பட அனைத்தும் முடிவு செய்யப்படும்” என்றார்.
இதையொட்டி, “தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை விதி 26 (1) ன் கீழ் பேரவைத் தலைவர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, ஏற்கென வே அறிவிக்கப்பட்ட ஜூன் 24 அன்றுக்கு பதி லாக, ஜூன் 20 அன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளார்” என்று சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் கி. சீனிவாசனும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.