சென்னை, ஜூன் 8- ஆருத்ரா, ஹிஜாவு மோசடிகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை அறிக் கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிக வட்டி தருவ தாக கூறி பொதுமக்களிடம் ஆயிரக் கணக்கான கோடி சுருட்டி மிகப்பெரிய மோசடி செய்த ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎப்எஸ் நிறுவனங்கள் தொடர் புடைய வழக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர மாக விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த மோசடி விவகாரத்தில் மோசடி நிறுவனத்தின் உரிமையாளர் கள், தலைமறைவான நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து பல கோடி ரூபாய் பணம், முக்கிய ஆவணங் களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த மோசடி விவகாரத்தில் பல்லாயிரக்கணக் கான மக்கள் ஏமார்ந்திருப்பது விசார ணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலீடுகளைப் பெற்று, மோசடி செய்த நிறுவனங் களின் நிர்வாகிகள் மீது பதியப்பட்ட வழக்குகளின் விசாரணையை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்கா ணிக்க உத்தரவிடக் கோரி, திரு வண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி வழக்கு தொடுத்திருந்தார்.
அந்த மனுவில், மோசடி செய்து திரட்டப்பட்ட தொகை, வெளிநாடு களில் முதலீடு செய்யப்பட்டுள்ள தால், இந்த வழக்குகளை அமலாக்கப் பிரிவு, சிபிஐ போன்ற அமைப்புகள் விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டி ருந்தார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் வெள்ளியன்று (ஜூன் 7) விசார ணைக்கு வந்தது. அப்போது ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறு வனங்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் மீது இதுவரை எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், இது குறித்து தமிழ்நாடு காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.