tamilnadu

img

திமுக அணிக்கு கைவினைஞர்கள் ஆதரவு

சென்னை, ஏப். 3- நடைபெற உள்ள மக்களவை தேர்தல் மற் றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பதாக கைவினைஞர்கள் முன்னேற்றக் கட்சி அறிவித்திருக்கிறது. அக் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இவ்வாறு முடிவு செய்யப் பட்டதாக அக்கட்சியின் தலைவர் பொன். கனகராஜ், செயலாளர் சி. உமாபதி, பொருளாளர் டி.எம்.எஸ். செந்தில்குமார் ஆகியோர் அறிக்கை ஒன்றில் இதனை தெரிவித்திருக்கிறார்கள்.தமிழகம் முழுவதும் வசிக்கும் கன்னார், கருமார், சிற்பி, தச்சர், பொற்கொல்லர்களின் தொழிற்சங்களின் கூட்டமைப்பும் விஸ்வகர்ம சமூகமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது உழைப்போம் என்றும் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.

;