கடந்த ஜுலை மாதம் தொடங்கி நடைபெற்று ஆகஸ்ட் மாதத்தில் முடிந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரவீன்,ராஜேஷ் ஆகிய இரண்டு இளம் விளையாட்டு வீரர்களை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நிகழ்ச்சிக்கு அழைத்து விளையாட்டு வீரர்களை பாராட்டி மாணவ,மாணவியர்களிடம் கல்வியுடன்,விளையாட்டையும் பயில வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்து பேசினார். இதில் முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்ளிட்ட மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.