tamilnadu

img

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை.அக்.2- தமிழகத்தில் ஐஏஎஸ் அதி காரிகள் சிலர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். துணை முதல்வர் உத யநிதி ஸ்டாலினின் தனிச் செயலராக, ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அர சின் தலைமைச் செயலாளர் நா.முரு கானந்தம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: கால்நடை, பால், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.கோபால், உயர் கல்வித்துறையின் கூடுதல்  தலைமைச் செயலராக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். உயர்  கல்வித்துறையின் கூடுதல் தலைமை செயலர் பிரதீப் யாதவ், துணை முதல்வ ரின் தனிச் செயலராக நியமிக்கப்படு கிறார்.

தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் டான்ஜெட்கோ தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி, வருவாய் நிர்வாகம் -பேரிடர் மேலாண்மைத் துறையின் ஆணை யராக இடமாற்றம் செய்யப்படுகிறார். அவர் கவனித்துவந்த பொறுப்புகளை ஐஏஎஸ் அதிகாரி பி.அமுதா கூடுதல் பொறுப்புகளாக கவனித்துக் கொள்வார்.

வேலைவாய்ப்பு-பயிற்சி துறை யின் ஆணையர் இ.சுந்தரவள்ளி, கல்லூரி கல்வியியல் துறையின் ஆணையராகவும் தமிழக அரசின் பொதுத்துறை இணை செயலர் பி.விஷ்ணு சந்திரன் வேலை வாய்ப்பு- பயிற்சித் துறையின் ஆணையராகவும் இடமாற்றம் செய் யப்படுகின்றனர்.

சமூகநலத் துறை ஆணையர் வி.அமுதவள்ளி, தமிழக அரசின் கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறையின் செய லாளராகவும்,  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையின் சிறப்புச் செயலர் ஆர்.லில்லி சமூகநலத்துறை ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் வரு வாய்- நிதித்துறை கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, ஜவுளித்துறை இயக்கு நராக பணியிடமாற்றம் செய்யப்படு கிறார். அவர் கவனித்து வந்த பொறுப்பு களை ஐஏஎஸ் அதிகாரி தர்மேந்திர பிரதாப் யாதவ் கூடுதல் பொறுப்பு களாக கவனித்துக் கொள்வார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், தமிழக அரசின் பொதுத்துறை துணை செயலராக இடமாற்றம் செய்யப்படு கிறார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதி காரி சத்யபிரத சாஹூ, கால்நடை, பால், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்து றை பொறுப்புகளை கூடுதலாக கவனித்துக் கொள்வார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலர் சி.விஜயராஜ் குமார், தமிழக அரசின் மனிதவளம்-மேலாண்மைத் துறை பொறுப்புகளை, மறுஉத்தரவு வரும்வரை கூடுதலாக கவனித்துக் கொள்வார்.

மனிதவளம் -மேலாண்மைத் துறை செயலர் கே.நந்தகுமார், மின் வாரி யம்-டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படு கிறார். தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான எஸ்.ஸ்வர்ணா ராஷ்ட்ரிய உச்சதர் சிக் ஷ அபியான் (RUSA) திட்ட முதன்மைச் செயலர் மற்றும் மாநில திட்ட இயக்கு நராக நியமிக்கப்படுகிறார்.

நிதித்துறை இணை செயலர் எம்.பிரதிவிராஜ் சென்னை மாநகராட்சி யின் வருவாய் மற்றும் நிதித்துறை இணை ஆணையராக நியமிக்கப்படு கிறார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் ஜெ. ஜெயகாந்தன் தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குந ராக நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.