tamilnadu

img

அடையாறுக்குள் அடுக்குமாடி குடியிருப்புகள் கரையோர மக்களை மிரட்டும் அதிகாரிகள்

பெருங்களத்தூர், சசிவரதன் நகரில், தீர்வை விதிக்கப்பட்ட நஞ்சை தரிசு நிலத்தில் மக்கள் வசித்து வருகின்றனர். பணம் கொடுத்து இடத்தை வாங்கி 20  வருடத்திற்கு முன்பு குடியேறினர். இங்குள்ள மக்கள் அனைவரும் உடலு ழைப்பு தொழிலாளர்களாக உள்ளனர். இந்தப்பகுதி வழியாக செல்லும் 300 அடி  அகலம் கொண்ட அடையாற்றின் கரையோ ரம் இந்த குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த மக்களுக்கு சமீபத்தில் வருவாய்த்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது. இந்தப் பகுதிக்கு அருகே அடையாற்றை  150அடி நீளத்திற்கு மறித்து காசாகிராண்ட் என்ற தனியார் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பை கட்டியுள்ளது. நீர்நிலையை ஆக்கிரமித்து கட்ட அதிகாரிகள் எப்படி அனுமதி கொடுத்தார்கள்? அந்த நிறுவனத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்களை மட்டும் அதிகாரிகள் அகற்ற துடிப்பது ஏன்? என்று அங்குள்ள மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பணக்காரர்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதியா? 

“அடையாறு கரையின் இருபுறமும் பணம் படைத்தவர்கள் முறைகேடாக பட்டா பெற்றுள்ளனர். அவர்களின் இடத்திற்கு அருகே அடையாறு வரும்போது இசட் வடிவில் மாறுகிறது. அடுக்குமாடி வீடுகளை கண்டுகொள்ளாமல், ஏழை மக்களை மட்டும் வெளியேற்ற நினைப்பது ஏன்? பணக்காரர்க ளுக்கு ஒரு நீதி? ஏழைகளுக்கு ஒரு நீதியா? மாற்று இடம் எதுவும் தேவையில்லை. நிம்மதியாக வாழ அரசு பட்டா வழங்க வேண்டும்” என்கிறார் அங்கு குடியிருக்கும் மணிகண்டன்.