tamilnadu

img

என்.சங்கரய்யாவிற்கு தகைசால் தமிழர் விருது அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு தமிழக அரசு சார்பில் தகைசால் தமிழர் விருது  அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தாண்டிற்கான தகைசால் தமிழர் என்ற விருதுக்கு சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், சுதந்திர தினவிழாவன்று சங்கரய்யாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விருதினை வழங்க உள்ளார்.
கடந்த ஜூலை 18ம் தேதி 100வது பிறந்த நாளை கொண்டாடிய என். சங்கரய்யா, தனது கல்லூரி காலத்தில் சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்று சிறைக்கு சென்றார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு பொறுப்பை வகித்துள்ள இவர் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;