tamilnadu

img

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

‘மிக்ஜம்’ புயல் காரணமாக வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் டிச.2 முதல் 5 ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தொலைதூர கல்வி திட்டத்தில் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் மீண்டும் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

;