tamilnadu

img

பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு - அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

பள்ளிகளில் பாலியல் புகார்கள் குறித்து  விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று  2வது அலை உச்சமடைந்து வரும் சூழலில் பிளஸ் 2 பொதுத்தேர்வு  நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது
சென்னை சிபிஎஸ்இ பள்ளியில் மாணவிக்கு பாலியல் புகார் குறித்து விசாரணை செய்து அறிவுறுத்தப்படும். ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் - மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ளது. மேலும், மாநிலப் பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்படும். ஏற்கெனவே பள்ளிகளில் விசாகா கமிட்டி உள்ளது. பெண் ஆசிரியர் ஒருவர் இதற்கு தலைமை வகிப்பார். விசாகா கமிட்டி அனைத்துப் பள்ளிகளிலும் உள்ளதா, செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இனி பிரச்னை வராமல் தடுக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு வரைவு அறிக்கை தயாராக உள்ளது. முதல்வர் ஒப்புதலுக்குப்பின்னர் முறையாக மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றார்.

;