tamilnadu

img

சென்னை வருகிறது அனகோண்டா பாம்பு கிண்டி பாம்பு பண்ணையில் கூண்டு தயார்

சென்னை, ஏப். 25- சென்னையில் உள்ள கிண்டி பாம்பு பண்ணையில் வன உயிரினங்களை அருகில் இருந்து தொடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் 3டி  தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. பாம்பு  மனிதனை அச்சுறுத்தும் ஒரு உயிரின மாக பார்க்கப்படுகிறது. அதை கண்டாலே பயம் தானாகவே தொற்றி விடும். இந்தியாவின் பல பகுதிகளில் பாம்பு பண்ணைகள் உள்ளன.

கிண்டி பாம்பு பண்ணை
அதில் சென்னை கிண்டியில் உள்ள  பாம்பு பண்ணை மிகவும் பழமையா னது. மேலும் இது இந்திய அளவில் புகழ்பெற்றது. 1972ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் பரப்பளவில் இந்தியாவில் முதல்  முறையாக தொடங்கப்பட்ட பாம்பு  பண்ணை இது. சென்னை மாநகருக் குள் இருப்பதால் தினசரி ஆயிரக்கணக் கான பார்வையாளர்கள் இங்கு வந்து  பாம்புகளை பார்வையிட்டு செல்கின்ற னர்.

மாணவர்களுக்கு வகுப்பு
பாம்புகளை இனப்பெருக்கம் செய்தல், பாம்புகளின் வகைகள் மற்றும் அவற்றின் குணாதி சயங்கள் குறித்து மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தல், பாம்புகள் பற்றிய ஆராய்ச்சி செய்பவர்களுக்கு உதவுதல் எனப் பலவிதமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் பாம்புகள் பற்றி அறிந்து கொள்ளும் விதமாக புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டுவிரியன், கண்ணாடி விரியன்,  சுருட்டை விரியன், விஷம் கக்கும் பாம்பு, சாரை, நல்ல பாம்பு, மலைப் பாம்பு, பச்சை பாம்பு, தண்ணீர் பாம்பு - 125, சதுப்புநில முதலை, கங்கை  முதலை, உப்புநீர் முதலை மற்றும் வெளிநாட்டு முதலைகள் - 25, பாலாமை,  குளத்தாமை, நட்சத்திர ஆமைகள் மற்றும் வெளிநாட்டு ஆமைகள் - 50, ஓணான் வகைகள் - 21, பச்சோந்தி - 5, உடும்பு - 2 ஆகியவை இங்குள்ளன.

நுழைவுக் கட்டணம்

கிண்டி பாம்பு பண்ணையில் பெரிய வர்களுக்கு ரூ.30, சிறுவர்களுக்கு ரூ.10, நிழற்படம் எடுக்க ரூ.20, வீடியோ  எடுக்க ரூ.100 என கட்டணம் வசூலிக்கப் படுகிறது. காலை 9 முதல் மாலை 5:30 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். வாரம்  தோறும் செவ்வாயன்று விடுமுறையா கும்.

அனகோண்டா பாம்பு
இங்கு அனகோண்டா வகை பாம்பு களை பார்வைக்கு வைக்க, நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, தனி கூண்டு வைக்கப்பட்டுள்ளது. தேசிய  வன உயிரின ஆணையத்தின் அனு மதிக்காக நிர்வாகம் காத்திருக்கிறது.

3டி தொழில்நுட்பம்
இந்நிலையில் சென்னை கிண்டி  பாம்பு பண்ணையில் வன உயிரினங் களை அருகில் இருந்து தொட்டு பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத் தும் வகையில் ‘3 டி’ தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 3 டி விர்ச்சுவல் ரியாலிட்டி ஷோ, டைனோசர் உலகம், நீருக்கடியில் உலகம், வனப்பகுதி உலகம் போன்ற காட்சிகள் உள்ளன.

கட்டணம் எவ்வளவு?
நாம் விரும்பும் காட்சிகளை தேர்வு  செய்து கொள்ளலாம். இவை 5 முதல்  7 நிமிடங்கள் வரை காட்சிப்படுத்தப் படும். இதற்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் 3டி ‘அகிமெண்டட் ரியாலிட்டி ஷோ, வன  உயிரினங்களை அருகில் நின்று பார்ப்பது போன்றும், அவை நம்மை  சீண்டுவது போன்று காட்சி வடிவமைக் கப்பட்டுள்ளது. 10 நிமிடம் ஓடும்  காட்சிக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப் படும்.

குழந்தைகளுக்கு கோடை விடு முறை தொடங்கியுள்ள நிலையில்  கிண்டி பாம்பு பண்ணையில், 3டி தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தியுள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.