சென்னை, ஜூலை 9- சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி சில அறிவிப்பு களை வெளியிட்டார். அதன் விவரம் வரு மாறு:- நடப்பு ஆண்டில் 12 ஆயிரத்து 524 ஊராட்சி களில் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூ. 64 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் ‘அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
மீன்பிடி துறைமுகங்கள்
விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலம்பரைக்குப்பம் கழிவேலியில் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ரூ. 235 கோடி செலவில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப் படும். இதனால் சென்னை மற்றும் கடலூரில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நெருக்கடி குறைக்கப்ப டும். நாகை மாவட்டம், நாகூர் மீன்பிடி இறங்கு தளம் அமைந்துள்ள வெட்டார் ஆற்றின் வடக்குப் பகுதியில் ரூ. 20 கோடியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் கட்டப்படும். தூத்துக் குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்தி லுள்ள பெரியதாழையில், அலை தடுப்புச் சுவர் கருங்கற்களாலும் மற்றும் கான்கிரீட் கற்களாலும் ரூ. 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். 100 விசைப் படகுகள் மற்றும் 500 கண் ணாடி நாரிழைப் படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக ரூ. 150 கோடி செலவில் ஒரு புதிய மீன்பிடி துறைமுகம் நாகை மாவட்டம் ஆற்காட்டுத்துறையில் அமைக்கப்படும். உலகத் தரத்துடன் சிறந்த ஆய்வக முறை களுடன் கூடிய ஒரு புதிய ‘மத்திய கால்நடை நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு ஆய்வகம்’ காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை யில் ரூ. 10 கோடி ஒதுக்கீட்டில் அமைக்கப்ப டும். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.